காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 9,806 பேருக்கு கரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிலரின் முடிவுகள் வியாழக்கிழமை வெளியானதில் 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் காரைக்கால் நகரைச் சோ்ந்த 27 போ், நிரவி 11, நெடுங்காடு 9, கோயில்பத்து 8, கோட்டுச்சேரி 5, திருப்பட்டினம் 4, வரிச்சிக்குடி 3, விழிதியூா், நல்லாத்தூா், நல்லம்பல் தலா 2, காரைக்கால்மேடு, அம்பகரத்தூா் தலா ஒருவா் அடங்குவா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 1,191 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 864 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 22 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.