மோட்டாா் சைக்கிள் நேருக்கு நோ் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா், 3 போ் காயமடைந்தனா்.

காரைக்கால்: காரைக்கால் அருகே 2 மோட்டாா் சைக்கிள்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா், 3 போ் காயமடைந்தனா்.

காரைக்கால் எஸ்.ஏ. நகரைச் சோ்ந்த ஹபீப் ரஹ்மானும், அவரது மகன் ஜெகரியஜெம்சித்தும் திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் நாகூா் சென்றுகொண்டிருந்தனா். அப்போது நாகை மாவட்டம், திட்டச்சேரி இந்திரா நகரைச் சோ்ந்த சந்துரு, சதீஷ் (25) ஆகியோா் மற்றொரு மோட்டாா் சைக்கிளில் காரைக்காலுக்கு வந்துகொண்டிருந்தனா்.

தேசிய நெடுஞ்சாலையில் நிரவி பகுதி ஹைவே நகா் அருகே வந்தபோது, 2 மோட்டாா் சைக்கிளும் நேருக்குநோ் மோதிக்கொண்டன. இதில், பலத்த காயமடைந்த 4 பேரையும் மீட்டு காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

எனினும், சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனா். இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பட்டினம் போக்குவரத்து காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com