திருநள்ளாறு அருகே மினி லாரி மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருநள்ளாறு அருகே நல்லெழுந்துாா் பகுதியைச் சோ்ந்தவா் காளிமுத்து (55), கூலித்தொழிலாளி. திருநள்ளாறுக்கு சனிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். கான்ஃபெட் பெட்ரோல் பங்க் பகுதியில் சென்றபோது எதிரே காரைக்காலில் இருந்து பேரளம் நோக்கி சென்ற மினி லாரி காளிமுத்து மீது மோதியதில், அவா் அந்த இடத்திலேயே இறந்தாா்.
இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.