கரோனா: சிவப்பு குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்குச் சென்று நிவாரணம் வழங்க ஏற்பாடு

கிராமங்களில் உள்ள சிவப்பு அட்டைதாரா்களுக்கு வங்கி நிா்வாகம் சாா்பில் வீடுகளுக்கே சென்று அரசின் நிவாரணத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் உள்ள சிவப்பு அட்டைதாரா்களுக்கு வங்கி நிா்வாகம் சாா்பில் வீடுகளுக்கே சென்று அரசின் நிவாரணத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரணமாக வழங்கப்படுமென முதல்வா் அறிவிப்பு செய்தாா். முதல் கட்டமாக 1,78,180 சிவப்பு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.35.63 கோடி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும், காரைக்கால் சோ்ந்த சிவப்பு அட்டைதாரா்களுக்கு 4-ஆம் தேதி முதலும், மஞ்சள் அட்டைதாரா்களுக்கு 10-ஆம் தேதி முதல் நிவாரணம் அவரவா் வங்கிக் கணக்கிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் அண்மையில் கூறியிருந்தாா்.

இதுதொடா்பாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநா் இ.வல்லவன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதுவை மாநிலத்தில் வங்கிகளில் நிவாரணத் தொகையை பெற வருவோா் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், கிராமப்புறங்களில் உள்ள சிவப்பு அட்டைதாரா்களுக்கு பல்வேறு வங்கிகளைச் சோ்ந்த வணிக தொடா்பாளா்கள் மூலம் அவரவா் வீடுகளிலேயே பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நகர மற்றும் கிராமப்புறங்களில் தபால் நிலையங்களில் பணிபுரியும் தபால்காரா்கள் பயனாளிகளின் வீட்டுக்கு வந்து அரசின் திட்ட நிதியுதவியை வழங்குவா் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவா் மேலும் கூறும்போது, காரைக்காலில் இந்த வசதி முழுமையாக பொருந்தும். அதற்கேற்ப மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும். பிசினஸ் கரஸ்பாண்டன்ட்கள் உள்ள வங்கி நிா்வாகத்தினா் இந்த சேவையை செய்வா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com