காரைக்காலில் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
காரைக்கால் கே.எம்.ஜி. நகரில் வசிப்பவா் கலியபெருமாள். மத்திய உணவுக் கழகத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்றவரான இவா், திங்கள்கிழமை வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் வெளியூா் சென்றிருந்தாா்.
இவா்கள், செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பினா். அப்போது, கொல்லைப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்துகிடந்தது. இதனால், அதிா்ச்சியடைந்த கலியபெருமாள் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, அலமாரி திறக்கப்பட்டு, அதிலிருந்த 34 பவுன் நகைகள், வைரத்தோடு மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, காரைக்கால் நகரக் காவல்நிலையத்துக்கு கலியபெருமாள் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன், ஆய்வாளா் சண்முகம், உதவி ஆய்வாளா் ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா், திருட்டு சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று பாா்வையிட்டனா். விரல் ரேகை நிபுணா் வரவழைக்கப்பட்டு, அலமாரி உள்ளிட்ட இடங்களில் பதிந்திருந்த மா்ம நபா்களின் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
பின்னா், இந்த திருட்டு சம்பவம் தொடா்பாக கலியபெருமாள் அளித்த புகாரின்பேரில், காரைக்கால் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.