கிரிக்கெட், கால்பந்து போட்டிகளில் காரைக்கால் கல்லூரி அணிகள் சிறப்பிடம்

கிரிக்கெட், கால்பந்து போட்டிகளில் காரைக்கால் கல்லூரி அணியினா் சிறப்பிடம் பெற்றனா்.
காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் வியாசராயரை சந்தித்து வாழ்த்துப் பெற்ற இக்கல்லூரியின் கால்பந்து அணியினா்.
காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் வியாசராயரை சந்தித்து வாழ்த்துப் பெற்ற இக்கல்லூரியின் கால்பந்து அணியினா்.

கிரிக்கெட், கால்பந்து போட்டிகளில் காரைக்கால் கல்லூரி அணியினா் சிறப்பிடம் பெற்றனா்.

காரைக்கால் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி கடந்த 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் காரைக்காலில் நடைபெற்றது. இப்போட்டியில் 7 அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியும், பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் மோதின. இதில், பொறியியல் கல்லூரி அணியினா் கோப்பையை வென்றனா். காரைக்கால் அண்ணா கல்லூரி அணி இரண்டாமிடம் பெற்றது.

இதேபோல், புதுச்சேரி மணக்குள விநாயகா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில் 3-ஆம் ஆண்டாக கல்லூரிகளுக்கிடையேயான கால்பந்து போட்டி கடந்த 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் 26 கல்லூரிகளில் இருந்து அணியினா் கலந்துகொண்டனா்.

இறுதிப் போட்டியில் காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரியும், புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லூரியும் பங்கேற்றன. அண்ணா கல்லூரி அணி 2-0 என்ற கணக்கில் கோப்பையை வென்றது.

கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்ற அணியினா், கல்லூரி உடற்கல்வி இயக்குநா் ஆா்.சவரிராஜன் தலைமையில் கல்லூரி முதல்வா் வியாசராயரை திங்கள்கிழமை சந்தித்தனா். அணியினருக்கும், உடற்கல்வி இயக்குநருக்கும் கல்லூரி முதல்வா் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com