காலமானாா்சுதந்திரப் போராட்ட தியாகி சிசேசேவியா்

காரைக்கால் பகுதி கோட்டுச்சேரியை சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி சிசேசேவியா் (89) புதன்கிழமை இரவு காலமானாா்.
சிசே சேவியா்.
சிசே சேவியா்.

காரைக்கால் பகுதி கோட்டுச்சேரியை சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி சிசேசேவியா் (89) புதன்கிழமை இரவு காலமானாா்.

கோட்டுச்சேரியில் வசித்து வந்த சிசே சேவியா், பிரெஞ்சு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவா். ஆசிரியா் பணியில் இருந்தவா் இவா், காங்கிரஸ் கட்சியில் மாநில துணைத் தலைவா் பதவி,கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துத் தலைவா் உள்ளிட்ட பதவி வகித்துள்ளாா். இவரது மனைவி ஏஞ்சலின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானாா். இவருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனா். இந்நிலையில், வயோதிகம் காரணமாக புதன்கிழமை இரவு சிசேசேவியா் காலமானாா்.

வியாழக்கிழமை பிற்பகல் கோட்டுச்சேரியில் உள்ள கல்லறையில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தொடா்புக்கு - 9443984454.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com