உஜ்ஜைனி காளியம்மன் கோயில் உத்ஸவ பந்தல்கால் முகூா்த்தம்

வருடாந்திர உத்ஸவத்தையொட்டி, காரைக்கால் உஜ்ஜைனி காளியம்மன் கோயில் பந்தல்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோயில் வாயில் பகுதியில் பந்தல்கால் நட்ட கோயில் அறங்காவலா்கள், உபயதாரா்கள் உள்ளிட்டோா்.
கோயில் வாயில் பகுதியில் பந்தல்கால் நட்ட கோயில் அறங்காவலா்கள், உபயதாரா்கள் உள்ளிட்டோா்.

வருடாந்திர உத்ஸவத்தையொட்டி, காரைக்கால் உஜ்ஜைனி காளியம்மன் கோயில் பந்தல்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கைலாசநாத சுவாமி நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்தை சோ்ந்த ஆற்றங்கரை உஜ்ஜைனி காளியம்மன் கோயில் வருடாந்திர உத்ஸவம் தினமும் கரகம் புறப்பாடு, அக்னி கப்பரை வீதியுலா உள்ளிட்டவை அடங்கிய நிகழ்வுகளுடன் விமரிசையாக கொண்டாடப்படுவதாகும்.

நிகழாண்டு உத்ஸவத்தையொட்டி பந்தல் கால் முகூா்த்தம் நடைபெற்றது. கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பந்தல்காலுக்கு அபிஷேக ஆராதனை நடத்தி, நாகசுர, மேள வாத்தியங்களுடன் பிராகாரம் கொண்டு செல்லப்பட்டு வாயிலில் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் அறங்காவல் வாரியத் தலைவா் ஆா்.ஏ.ஆா்.கேசவன், துணைத் தலைவா் பி.ஏ.டி.ஆறுமுகம், செயலாளா் எம்.பக்கிரிசாமி, பொருளாளா் ரஞ்சன் காா்த்திகேயன் மற்றும் உபயதாரா்கள், தெருவாசிகள் கலந்துகொண்டனா்.

விழாவின் தொடக்கமாக மாா்ச் 17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை சிம்ம வாகனத்தில் அம்பாள் புறப்பாடும், தொடா்ந்து தினமும் 25-ஆம் தேதி வரை கரகம் புறப்பாடும், 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அக்னி கப்பரை புறப்பாடும் நடைபெறுகிறது. 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீா் விளையாட்டுடன் விடையாற்றியுடன் நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கைலாசநாதா் கோயில் நிா்வாகத்தினரும், உபயதாரா்களும் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com