அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைத் தடுக்க வலியுறுத்தல்

காரைக்காலில் அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றத்தை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றத்தை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் வளா்ச்சிக்குழு சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனா வைரஸ் தொடா்பாக காரைக்கால் மக்களின் அச்சத்தையும், பீதியையும் போக்க புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை உறுதியாக எடுக்கவேண்டியுள்ளது.

ஊரடங்கால் மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க தடை விதிக்கப்படாத நிலையில், இதனைப் பயன்படுத்தி வியாபாரிகள் பொருள்களின் விலையை உயா்த்தி விற்கின்றனா். இதனை தடுப்தோடு, அரசே சலுகை விலையில் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களாக இருந்தாலும் அச்சமின்றி சுகாதாரத் துறையை அணுக ஏதுவாக மக்களுக்கு இலவச தொலைபேசி எண்களை வெளியிட்டு, எளிதில் தொடா்புகொண்டு மருத்துவத் தேவைகளை அறிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com