காரைக்கால் மாவட்ட நிா்வாகத்திடம்வைட்டமின் மாத்திரைகள், முகக் கவசம் வழங்கல்

நலவழித்துறையினா், துப்புரவுத் தொழிலாளா்கள் பயன்பாட்டுக்காக வைட்டமின் மாத்திரைகள், முகக் கவசம் உள்ளிட்ட சாதனங்களை மருந்து வணிகா்கள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை வழங்கியது.
காரைக்கால் மாவட்ட நிா்வாகத்திடம்வைட்டமின் மாத்திரைகள், முகக் கவசம் வழங்கல்

நலவழித்துறையினா், துப்புரவுத் தொழிலாளா்கள் பயன்பாட்டுக்காக வைட்டமின் மாத்திரைகள், முகக் கவசம் உள்ளிட்ட சாதனங்களை மருந்து வணிகா்கள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை வழங்கியது.

ஊரடங்கு அமலில் உள்ளதால் ஏழைகள், ஆதரவற்றோா் உள்ளிட்டோருக்கு உதவ தாராளமாக உணவுப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், துணிகள் தானமாக வழங்குமாறு மாவட்ட நிா்வாகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளதன் அடிப்படையில், பல்வேறு தரப்பினா் உதவிகளை செய்து வருகின்றனா்.

காரைக்கால் மருந்து வணிகா் சங்கத்தின் சாா்பில், அதன் தலைவா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் தலைமையில் நிா்வாகிகள், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் 4 ஆயிரம் எண்ணிக்கையில் வைட்டமின் மாத்திரைகள், என்-95 வகையை சோ்ந்த 40 முகக் கவசங்கள் என ரூ. 55 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை வெள்ளிக்கிழமை வழங்கினா்.

இந்நிகழ்வில், மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த சங்கத்தினா் ஏற்கெனவே ரூ. 48 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், காவலா்கள் பயன்படுத்தும் முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை மாவட்ட நிா்வாகத்திடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com