காரைக்காலில் மேலும் 13 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா உறுதியானதாக நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே.மோகன்ராஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா உறுதியானதாக நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே.மோகன்ராஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 5, கோயில்பத்து 3, திருப்பட்டினம் 2, நிரவி, கோட்டுச்சேரி, காரைக்கால்மேடு தலா 1 என கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் உள்ளனா். கடந்த 2-ஆம் தேதி 477 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதுவரை காரைக்காலில் 38,459 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. 3,458 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டிருந்த 3,221 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோராக 153 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சை பிரிவில் 8 போ், தீவிர சிகிச்சையில் 4 போ், கரோனா சிறப்பு மையமான அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 14 போ் உள்ளனா். இதுவரை 60 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com