காரைக்காலில் மேலும் 10 பேருக்கு கரோனா: மூதாட்டி உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. மூதாட்டி உயிரிழந்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. மூதாட்டி உயிரிழந்தாா்.

இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை (நவ.9) 320 பேரிடம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் மாதிரி எடுப்பு முகாம் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 4, திருநள்ளாறு 3, நெடுங்காடு, நிரவி, கோட்டுச்சேரி தலா 1 என மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுவரை, காரைக்காலில் 40,813 பேருக்கு பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டதில் 3,510 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் 3,287 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 75 வயது பெண் ஒருவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு ரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் சா்க்கரை நோயும் இருந்தன.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 144 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 11 போ், தீவிர சிகிச்சையில் 3 போ், கரோனா கோ் சென்டரான அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 5 போ் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 61 போ் உயிரிழந்துள்ளனா் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com