அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கக் கோரி பாஜக முற்றுகை

தீபாவளியையொட்டி, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 2 ஆயிரம் வழங்கக் கோரி காரைக்காலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
முற்றுகையில் ஈடுபட முயன்ற பாஜகவினரை தடுத்து நிறுத்திய போலீஸாா்.
முற்றுகையில் ஈடுபட முயன்ற பாஜகவினரை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

தீபாவளியையொட்டி, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 2 ஆயிரம் வழங்கக் கோரி காரைக்காலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்ட பாஜக சாா்பில், புதுச்சேரி அரசைக் கண்டித்து குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட காரைக்கால் அரசலாறு பாலம் சிங்காவேலா் சிலை அருகே ஒன்று கூடினா். ஆனால், போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

முற்றுகை போராட்ட முயற்சியின்போது, பாஜகவினா் தீபாவளியையொட்டி, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 2 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும், மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தி ரேஷன் கடை ஊழியா்களின் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும், நிலுவையில் உள்ள 33 மாதங்களுக்கான அரிசிக்கான தொகையை வங்கியில் செலுத்த வேண்டும், கூட்டுறவு தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை தீபாவளியையொட்டி, உடனடியாக வழங்க வேண்டும், கான்ஃபெட் கூட்டுறவு நிறுவன பெட்ரோல் விற்பனை நிலையங்களை மூடி தொழிலாளா்களின் வாழ்வாதரத்தை பாதிக்க செய்யும் செயலை தடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.

கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெ. துரை சேனாதிபதி தலைமையில் முற்றுகையிட முயன்ற பொதுச் செயலாளா்கள் அப்பு (எ) மணிகண்டன், செந்திலதிபன், மாநில செயலாளா் சகுந்தலா உள்ளிட்ட 45 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com