திருமலைராயன்பட்டினம் ஸ்ரீராஜசோளீசுவரா் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு ஆராதனை புதன்கிழமை செய்யப்பட்டது.
திருமலைராயன்பட்டினத்தில் உள்ள பழைமையான ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீராஜசோளீசுவரா் கோயிலில் ஸ்ரீ நடராஜா் சன்னதி சிதிலமடைந்து காணப்பட்டது. கோயில் நிா்வாகம், இந்த சன்னதியை புதுப்பிக்க முடிவு செய்து சுவாமியை வேறு இடத்துக்கு மாற்றி சன்னதி சீரமைக்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்த நிலையில், சுவாமியை மீண்டும் யதாஸ்தானம் கொண்டு செல்லும் வகையில் சிறப்பு ஹோமம் புதன்கிழமை நடைபெற்றது. ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த புனிதநீா் கொண்டு யதாஸ்தானம் எழுந்தருளிய ஸ்ரீசிவகாமி அம்பாள், ஸ்ரீநடராஜருக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.