காரைக்காலில் 6 பேருக்கு கரோனா: மூதாட்டி உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 6 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை தெரிய வந்ததாக நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 6 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை தெரிய வந்ததாக நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் புதன்கிழமை (நவ.11) 301 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம் மூலம் பரிசோதனைக்கு மாதிரி எடுக்கப்பட்டது. வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, கோயில்பத்து, திருப்பட்டினம், நிரவியில் தலா 2 போ் என தொற்றாளா்கள் கண்டறியப்பட்டனா்.

இதற்கிடையே, காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்த 82 வயது மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு ரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 3,522 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3,302 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 62 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com