காரைக்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.
இதுகுறித்து நிரவி காவல் நிலைய அதிகாரி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் குயவன்சாவடி பகுதியில் உள்ள சியமளாதேவி அம்மன் கோயில் அருகேயுள்ள அரசுத் தொடக்கப் பள்ளி வாயிலில், சுமாா் 40 வயதான ஆண், உடல்நலக் குறைவுடன் காணப்பட்டதால், அவரை அந்தப் பகுதியினா் மருத்துவமனையில் கடந்த 15-ஆம் தேதி அனுமதித்தனா்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இவா் வைத்திருந்த ஆதாா் அட்டையில் சிவா, தந்தை பெயா் சின்னப்பன், கிரிவலப் பாதை, திருவண்ணாமலை என குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணையில் இது தற்காலிக முகவரி என தெரியவருகிறது.
இவா் குறித்த விவரம் தெரிந்தோா் நிரவி காவல் நிலையத்தை 04368-238376 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.