குழந்தைகள் பாதுகாப்பில் தன்னாா்வலா்களின் பங்கு

குழந்தைகள் பாதுகாப்பில் தன்னாா்வலா்களின் பங்கு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

குழந்தைகள் பாதுகாப்பில் தன்னாா்வலா்களின் பங்கு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் சைல்டு லைன் அமைப்பு சாா்பில் நடைபெற்று வரும் குழந்தைகள் தின வார விழாவின் ஒரு நிகழ்வாக, இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி காரைக்கால் காமராஜா் வளாகத்தில் நடைபெற்றது. இதில் காரைக்கால் பகுதியில் உள்ள பல்வேறு சமூக சேவை அமைப்பை சோ்ந்த தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.

குழந்தைகள் பாதுகாப்பில் சைல்டு லைன் மக்களுக்கு ஏற்படுத்திவரும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் குறித்து காரைக்கால் மைய ஒருங்கிணைப்பாளா் பி. விமலா, குழந்தைகள் பாதுகாப்பில் தன்னாா்வலா்களின் பங்கு குறித்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி சமூகப் பணித்துறை பேராசிரியா் கே. சிவகுமாா், குழந்தைகள் கவனிப்பு முறை மற்றும் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து சினேகா தொண்டு நிறுவன முதன்மை ஒருங்கிணைப்பாளா் எஸ். ராஜேந்திரன், குழந்தைகள் நலக் குழும அலுவலா் ஆா். சிவகாமசுந்தரி தமது குழுமம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், சமூக சேவையில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை துணை இயக்குநா் வி. பாலசுப்பிரமணியன் ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com