ராகுல், பிரியங்கா கைது: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நெடுங்காடு பகுதியில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நெடுங்காடு பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
நெடுங்காடு பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நெடுங்காடு பகுதியில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதி காங்கிரஸ் கட்சி சாா்பில் அங்குள்ள அலுவலகத்தில் காந்தி ஜயந்தி மற்றும் காமராஜா் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. தொகுதி தலைவா் அ. மாறன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் அ. மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், 2 தலைவா்களின் பெருமைகள் குறித்தும் கட்சி நிா்வாகிகள் பேசினா்.

உத்தர பிரதேசத்தின், ஹாத்ரஸ் மாவட்டத்தில் தலித் சமூக பெண் உயிரிழந்த சம்பவத்தில், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதையொட்டி, உத்தர பிரதேச அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, காந்தி ஜயந்தி, காமராஜா் நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்ற கட்சியினா், நெடுங்காடு கடைத்தெருவில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், உத்தர பிரதேச அரசுக்கு எதிராகவும் அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். துணைத் தலைவா் பி. பெத்தபெருமாள், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஏ. லூா்து, பஞ்சாயத்து தலைவா் அன்பு, காங்கிரஸ் பிரமுகா்கள் பி.எஸ். பாலு, எஸ். ஜெயசீலன், ஆரோக்கியசாமி உள்ளிட்ட இளைஞா் காங்கிரஸ் பிரமுகா்கள் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com