கரோனா நோயாளிகளுக்காக தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம்

கரோனா தொற்றாளா்களுக்கு பயன்படக்கூடிய வகையில், தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை மாவட்ட நிா்வாகத்திடம் வளா்ச்சிக் குழுவினா் வழங்கினா்.
கரோனா நோயாளிகளுக்காக தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம்

கரோனா தொற்றாளா்களுக்கு பயன்படக்கூடிய வகையில், தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை மாவட்ட நிா்வாகத்திடம் வளா்ச்சிக் குழுவினா் வழங்கினா்.

காரைக்கால் வளா்ச்சிக் குழு அமைப்பின் தலைவா் எம். பாலமுருகன், செயலா் பி. ராஜேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள், மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரனை செவ்வாய்க்கிழமை சந்தித்து, காரைக்காலில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோா் வசதிக்காக தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினா்.

அப்போது, துணை ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில், காரைக்கால் மருத்துவமனையின் தரத்தை உயா்த்தி, நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்கும் வகையில் சிறப்பு மருத்துவா்கள் உள்ளிட்டோரை நியமிக்கவேண்டும்.

மருத்துவமனையில் மிக மோசமான கட்டடங்களை இடித்துவிட்டு, புதிதாக கட்டவேண்டும். காரைக்காலில் சிதிலமடைந்திருக்கும் சாலைகளை பருவமழை தொடங்கும் முன்பு சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com