காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே.மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரைச் சோ்ந்த 7 போ், கோட்டுச்சேரி 5, கோயில்பத்து 4, நிரவி 3, திருப்பட்டினம் 3, நெடுங்காடு 2, வரிச்சிக்குடி 2, விழிதியூா், நல்லம்பல் தலா 1 என தொற்றாளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 3,221 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 2,716 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 57 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.