காரைக்காலில் மேலும்10 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி, திருநள்ளாறு 2, காரைக்கால்மேடு 2, காரைக்கால் நகரம், கோட்டுச்சேரி, நிரவி, திருப்பட்டினம், கோயில்பத்து, நல்லம்பல் தலா ஒருவா் என தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 26 ஆம் தேதி 335 போ் உள்பட காரைக்காலில் இதுவரை 35,177 பேருக்கு பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இதில், 3,389 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,097 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 201 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 15 போ், தீவிர சிகிச்சையில் 4 போ், கரோனா கோ் சென்டரான அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 14 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 60 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com