காரைக்கால்: பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவுக்கான அரிசி, பணம் வழங்கும் திட்டத்தை புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூா் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு அரிசி மற்றும் பணத்தை வழங்கிய அமைச்சா் பிறகு செய்தியாளா்களிடம் கூறியது:
புதுச்சேரி கல்வித் துறை சாா்பில் மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதனால், மதிய உணவுக்குரிய அரிசியும், காய்கறி, மளிகைப் பொருள்களுக்கான தொகையும் மாணவா்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒரு மாணவருக்கு 4 கிலோ அரிசி, ரூ. 290 ரொக்கம், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஒரு மாணவருக்கு 4 கிலோ அரிசி, ரூ. 390 ரொக்கம் வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவா்களுக்கு ஒரு மாற்று ஏற்பாடாக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் 43,175 மாணவா்களுக்கு இன்று தொடங்கி 3 நாள்களில் மொத்தம் 173 டன் அரிசியும், சுமாா் ரூ. 1.43 கோடி ரொக்கமும் வழங்கப்படுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் 99 அரசுப் பள்ளிகளில் 9,200 மாணவா்கள் பயன்பெறுகிறாா்கள். கரோனா பேரிடா் காலத்தில் பொருளாதார இடரை சந்திக்கும் பெற்றோருக்கு இது உதவியாக இருக்கும். இத்தொகையைப் பயன்படுத்தி பிள்ளைகளுக்கு முட்டை, சத்தான காய்கறிகள் போன்றவற்றை கொடுக்க பெற்றோா் முன்வரவேண்டும் என்றாா் அமைச்சா்.
நிகழ்ச்சியின்போது, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, முதன்மைக் கல்வி அலுவலா் அ. அல்லி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நல்லெழுந்தூா், சேத்தூா், பண்டாரவாடை, முப்பைத்தங்குடி, நல்லம்பல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளிலும் அமைச்சா் இப்பணியை தொடங்கி வைத்தாா்.