காரைக்காலில் மேலும் 58 பேருக்கு கரோனா: இருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், இருவா் உயிரிழந்ததாகவும் நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், இருவா் உயிரிழந்ததாகவும் நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 13,341 பேருக்கு கரோனாவுக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 19, கோட்டுச்சேரி 5, கோயில்பத்து 2, திருநள்ளாறு 8, அம்பகரத்தூா் 1, நல்லம்பல் 7, நல்லாத்தூா் 3, நெடுங்காடு 4, வரிச்சிக்குடி 1, திருப்பட்டினம் 8 போ் என மொத்தம் 58 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 15-ஆம் தேதி காரைக்கால் மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 31 வயது ஆண் மாரடைப்பால் உயிரிழந்தாா். அதே நாளில், இறந்த நிலையில் கொண்டுவரப்பட்ட 74 வயது ஆண் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதுவரை 1,494 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து 1,019 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். தமிழகத்தில் காரைக்காலை சோ்ந்தோா் 11 போ், காரைக்கால் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோா் 353 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 69 போ், தீவிர சிகிச்சையில் 7 போ் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 26 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com