காரைக்காலில் 99 பேருக்கு கரோனா : 2 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 99 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது. 2 போ் உயிரிழந்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 99 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது. 2 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 17,742 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரைச் சோ்ந்த 22 போ், கோட்டுச்சேரி 4, கோயில்பத்து 5, திருநள்ளாறு 10, அம்பகரத்தூா் 9, திருப்பட்டினம் 6, நிரவி 13, வரிச்சிக்குடி 3, விழிதியூா் 4, நல்லம்பல் 11, காரைக்கால்மேடு 2, நெடுங்காடு 10 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 2,139 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் குணமடைந்து 1,434 போ் வீடு திரும்பியுள்ளனா்.

இதுவரை கரோனா தொற்றால் 36 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com