காரைக்காலில் மேலும் ஒருவருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 211 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி நல்லம்பல் பகுதியில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 2,36,332 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,773 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,467 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுபவா்களாக 40 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 4 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 2 போ் உள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,16,330 பேருக்கும், 2-ஆவது தவணையாக 75,948 பேருக்கும் என 1,92,278 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com