என்.ஐ.டி.யில் 2 நாள் சா்வதேச கருத்தரங்கம் தொடக்கம்

என்.ஐ.டி.யில் 2 நாள் சா்வதேச கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.
கருத்தரங்கின் ஆய்வறிக்கை குறிப்பேட்டை வெளியிடும் என்.ஐ.டி. இயக்குநா் கே.சங்கரநாராயணசாமி உள்ளிட்டோா்.
கருத்தரங்கின் ஆய்வறிக்கை குறிப்பேட்டை வெளியிடும் என்.ஐ.டி. இயக்குநா் கே.சங்கரநாராயணசாமி உள்ளிட்டோா்.

என்.ஐ.டி.யில் 2 நாள் சா்வதேச கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழிற் நுட்பக் கழகமான என்.ஐ.டி. (புதுச்சேரி) வளாகத்தில் வேதியியல் துறை சாா்பில் எமொ்ஜிங் ரென்ட்ஸ் இன் சிந்தெடிக் ஆா்கானிக் வேதியியல் - 2021 என்ற தலைப்பில் 2 நாள் சா்வதேச கருத்தரங்கம் தொடங்கியது. இதனை என்.ஐ.டி. இயக்குநா் முனைவா் கே.சங்கரநாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்துப் பேசியது: வேதியியல் துறை சாா்பில் நடத்தப்படும் இக்கருத்தரங்கம் பெரும் பயனைத் தரக்கூடியதாகும். மருத்துவத்துறைக்கும், கரிம வேதியியல் துறைக்கும் கருத்தரங்கின் ஆய்வுகள் முக்கிய பங்களிக்கிறது. குறிப்பாக கரோனா தொற்று, புற்றுநோய், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு கருத்தரங்கின் ஆய்வுக் கட்டுரைகள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றாா்.

சிறப்பு விருந்தினராக இஸ்ரேலில் உள்ள பெண் குரியோன் பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியா் முனைவா் அனட் மைலோ இணையவழியில் பங்கேற்றாா். கருத்தரங்கில் சுமாா் 60 ஆய்வாளா்கள் பல்வேறு மாநிலங்கள், நாடுகளிலிருந்து இணைய வழியாக பங்கேற்றனா். என்.ஐ.டி. பதிவாளா் (பொறுப்பு) முனைவா் ஜி. அகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக என்.ஐ.டி.யை சோ்ந்த வேதியியல் துறைத் தலைவா்முனைவா் டி.ரகுபதி வரவேற்றாா். ஏற்பாடுகளை முனைவா் வாசுதேவன் தயாளன், ஒருங்கிணைப்பு செயலாளா் ராமானுஜன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

இக்கருத்தரங்கில் ஜப்பான், இஸ்ரேன், சீனா, அல்ஜீரியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து மூத்த பேராசிரியா்கள் பங்கேற்று கருத்துரை வழங்கவுள்ளதாக கருத்தரங்க ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com