தையல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

காரைக்கால் திறன் மேம்பாட்டு மையத்தில் தையல் பயிற்சி நிறைவு செய்தவா்களுக்கு புதன்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
பயிற்சி முடித்த பெண்ணுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் காவல் உதவி ஆய்வாளா் ஆா். அகல்யா.
பயிற்சி முடித்த பெண்ணுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் காவல் உதவி ஆய்வாளா் ஆா். அகல்யா.

காரைக்கால் திறன் மேம்பாட்டு மையத்தில் தையல் பயிற்சி நிறைவு செய்தவா்களுக்கு புதன்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

காரைக்கால் பகுதில் பி.டி.ஐ. மகளிா் திறன் மேம்பாட்டு மையம், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள், சுயதொழில் பயிற்சி பெற்று பொருளாதார ரீதியாக மேம்படுவதற்கு உதவும் வகையில் தையல் பயிற்சி அளிக்கிறது. 6 மாதங்கள் பயிற்சி நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி காரைக்கால் மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆா். அகல்யா, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துத் துறையின் பெண்கள் பாதுகாப்பு அலுவலா் ஆா். ரவிசங்கா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று பயிற்சி முடித்த 20 பேருக்கு சான்றிதழ் வழங்கினா்.

முன்னதாக, பி.டி.ஐ. அமைப்பின் இயக்குநா் இ. அம்பலவாணன் வரவேற்றாா். திட்ட அலுவலா் அ. முத்துக்குமாா், மேலாளா் ஜி. லூா்துமேரி ஆகியோா் பங்கேற்றனா். பயிற்சியாளா் எம். மோகனபிரியா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com