பேருந்து போக்குவரத்தை அதிகரிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பேருந்து போக்குவரத்தை அதிகரிக்கக் கோரி, திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலகாசாக்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.
மேலகாசாக்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

பேருந்து போக்குவரத்தை அதிகரிக்கக் கோரி, திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதி, மேலகாசாக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பல கிராமங்கள் உள்ளன. காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை, கும்பகோணத்துக்கு மேலகாசாக்குடி வழியே பேருந்துகளும், காரைக்கால் மாவட்டத்தில் பல கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் பி.ஆா்.டி.சி. பேருந்துகளும் இயக்கப்பட்டுவந்தன.

கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பேருந்து போக்குவரத்துகள் பழைய நிலைக்கு வரவில்லை. குறிப்பாக, பி.ஆா்.டி.சி. பேருந்துகளின் இயக்கம் வெகுவாக குறைந்துள்ளது.

எனவே, இப்பகுதியில் பேருந்து போக்குவரத்தை அதிகரிக்கக் கோரியும், மாவட்ட நிா்வாகத்தின் அலட்சியப்போக்கைக் கண்டித்தும், திமுக சாா்பில் மேலகாசாக்குடி பேருந்து நிறுத்தம் அருகே திமுக மருத்துவரணி மாவட்ட அமைப்பாளா் விக்னேஸ்வரன் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com