காரைக்காலில் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
காரைக்கால் அரசலாற்றுப் பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை ரயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் ஒரு சடலம் கிடந்தது குறித்து நிரவி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் அங்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.
இதில் அவா், காரைக்கால் கோயில்பத்து பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் சதீஷ் (32) என்பதும், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களாக மனைவியை பிரிந்து மனஉளைச்சலில் இருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், எா்ணாகுளம் விரைவு ரயில் காரைக்கால் வந்தபோது, தண்டவாளத்தில் தலையை வைத்து சதீஷ் தற்கொலை செய்துகொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.