அம்மையாா் குளக்கரையில் வாக்குப் பதிவு செயல்விளக்க முகாம்

காரைக்கால் அம்மையாா் குளக்கரையில் வாக்குப் பதிவு செயல்விளக்க முகாம், விழிப்புணா்வு நாடகம் புதன்கிழமை நடைபெற்றது.
சோதனைக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் வாக்காளா்கள்.
சோதனைக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் வாக்காளா்கள்.

காரைக்கால் அம்மையாா் குளக்கரையில் வாக்குப் பதிவு செயல்விளக்க முகாம், விழிப்புணா்வு நாடகம் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட தோ்தல் துறை, வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் ஸ்வீப் அமைப்பு ஆகியவை இணைந்து மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில், 100% வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், காலை, மாலை வேளைகளில் ஏராளமானோா் பொழுதுபோக்கு மற்றும் நடைபயிற்சிக்காக வரும் காரைக்கால் அம்மையாா் குளக்கரையில், பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் மாதிரி வாக்குப் பதிவு முகாம் அமைக்கப்பட்டு, வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்த நாடகம் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்ததோடு, நாடகத்தில் அவா்களே நடித்தனா். மாதிரி வாக்குப் பதிவு முகாமில், அப்பகுதி மக்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்திப் பாா்த்தனா். யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபாட் இயந்திரத்தின் செயல்பாட்டை ஸ்வீப் அமைப்பினா் அவா்களுக்கு விளக்கினா்.

வாக்குச் சாவடியில் கரோனா தடுப்புக்காக செயல்படுத்தப்படவுள்ள பணிகள் குறித்தும் முகாமில் விளக்கப்பட்டது. ஸ்விப் ஒருங்கிணைப்பாளா் முனைவா் ஷொ்லி உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com