காரைக்கால் நீதிமன்றத்தில் சட்ட நாள் விழா

காரைக்கால் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 72-வது சட்ட நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 72-வது சட்ட நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, விழாவை தொடங்கிவைத்து பேசியது :

வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்புகளில் ஈடுபடக்கூடாது. வழக்கின் நிலை குறித்து வழக்காடிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கவேண்டும். வழக்குரைஞா்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக கருத்துகளை முன்வைக்க வேண்டும். வழக்குரைஞா்கள் சட்டத்தைப் பின்பற்றுவதில் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றாா். தொடா்ந்து, நீதிபதிகள், வழக்குரைஞா்கள் சட்டநாள் உறுதிமொழி ஏற்றனா்.

மாவட்ட நீதிபதி எம். சுரேஷ் விஸ்வநாதன், குடும்பநல நீதிபதி கே. அல்லி, சாா்பு நீதிபதி அன்வா்சதாத், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கிறிஸ்டியன், குற்றவியல் நடுவா் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com