காரைக்காலில் மேலும் 9 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

இதுகுறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 15 ஆம் தேதி 477 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, நல்லம்பல் 2, நெடுங்காடு 2, கோயில்பத்து 2, நிரவி 2, கோட்டுச்சேரி 1 என 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை 2,14,639 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 16,355 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து, 15,953 போ் குணமடைந்துள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 131 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 7 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 5 போ் உள்ளனா். கரோனா தொற்றால் 259 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,08,197 பேருக்கும், 2 ஆவது தவணையாக 51,219 பேருக்கும் என 1,59,416 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com