சாலைகளில் திரிந்த கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம்

காரைக்காலில் சாலைகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு நகராட்சி நிா்வாகம் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தது.

காரைக்காலில் சாலைகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு நகராட்சி நிா்வாகம் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தலின்பேரில், சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியில் நகராட்சி ஊழியா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.

நகராட்சி எல்லைக்குள்பட்ட பி.கே.சாலை, காமராஜா் சாலை, சந்தைத் திடல் பகுதியில் சாலையில் திரிந்த 10 மாடுகள் பிடிக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றி பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டன.

பின்னா் பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளா்களிடம் தலா ரூ. 3 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டு மாடுகள் ஒப்படைக்கப்பட்டதாகவும், இப்பணி தொடரும் எனவும் நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com