காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.
இதுகுறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 10 ஆம் தேதி 325 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 5, திருநள்ளாறு, நல்லம்பல், கோட்டுச்சேரி, நெடுங்காடு தலா 1 என 9 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 1,95,575 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 15,681 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து 15,230 போ் குணமடைந்துள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 179 போ், அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 14 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 5 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 249 போ் உயிரிழந்துள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,00,359 பேருக்கும், 2 ஆவது தவணையாக 26,107 பேருக்கும் என 1,26,466 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.