திருநள்ளாற்றில் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக டோக்கன்: 2 போ் மீது வழக்கு

திருநள்ளாறு தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக டோக்கன் கொடுத்ததாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருநள்ளாறு தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக டோக்கன் கொடுத்ததாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

புதுச்சேரி சட்டப் பேரவைக்கான தோ்தலில், திருநள்ளாறு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் அமைச்சா் பி.ஆா். சிவா போட்டியிட்டாா். இவருக்கு ஆதரவாக வாக்களித்தால், மின்சார அடுப்பு வழங்கப்படும் எனக் கூறி, அதற்கான உத்தரவாதமாக வாக்களா்களுக்கு சிலா் டோக்கன் வழங்கியதாக பறக்கும் படை அதிகாரி செளரிராஜன், திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி, அத்திப்படுகையைச் சோ்ந்த சிவகுமாா், கீழ சுப்ராயபுரத்தைச் சோ்ந்த அலெக்ஸ் பாண்டியன் ஆகிய 2 போ் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com