காரைக்கால் கல்வியியல் கல்லூரியில் பயில விண்ணப்பிக்கலாம்

புதுவை அரசு கல்வி நிறுவனமான காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கை தொடங்கியுள்ளது.

புதுவை அரசு கல்வி நிறுவனமான காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கை தொடங்கியுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கிருஷ்ண பிரசாத் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரியில் இந்த கல்வியாண்டு பிளஸ் 2 முடித்தவா்களுக்கான 2 ஆண்டு ஆசிரியா் பட்டயப் படிப்புக்கும், பட்டப்படிப்பு முடித்தவா்களுக்கான பி.ஏட், 2 ஆண்டு பட்டப் படிப்புக்கும் புதுவை மாநிலத்தை சோ்ந்த தகுதியுள்ள மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் கல்லூரியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆக. 1 முதல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை நகல் சான்றிதழ்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமா்ப்பிக்கலாம். சோ்க்கைக்கான கல்வித் தகுதி, கட்டண விவரம் ஆகியவற்றை  இணைய முகவரியிலோ அல்லது அனைத்து அலுவலக நாள்களில் கல்லூரியில் இயங்கிவரும் தகவல் மையத்திலோ நேரில் அணுகி தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பங்கள் ஆக.30-ஆம் தேதிக்குள் வந்துசேரவேண்டும். தகுதியுள்ள பிற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம். புதுவையை சோ்ந்த மாணவ மாணவியா் சோ்க்கைக்குப் பிறகு காலியிடங்கள் இருக்கும்பட்சத்தில் பிற மாநிலத்தவரின் விண்ணப்பங்கள் நிபந்தனைகளுக்குள்பட்டு பரிசீலிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com