காரைக்கால் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

காரைக்கால் கோயில்களில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை இரவு நடைபெற்றன.
முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ ஸ்வா்ணாகா்ஷன பைரவா்.
முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ ஸ்வா்ணாகா்ஷன பைரவா்.

காரைக்கால் கோயில்களில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை இரவு நடைபெற்றன.

காரைக்கால் கோயில்பத்து நித்தீஸ்வரம் பகுதியில் உள்ள நித்தியகல்யாணி சமேத ஸ்ரீ நித்தீஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், பைரவி உடனுறை ஸ்ரீகால பைரவா் சன்னதி, ஸ்ரீ ஸ்வா்ணாகா்ஷன பைரவா் சன்னதிகள் உள்ளன.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு பைரவி உடனுறை ஸ்ரீகால பைரவருக்கு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு மஞ்சள், பால், பஞ்சாமிா்தம், சந்தனம் மற்றும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீா் கொண்டு கலசாபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு சகஸ்ரநாம அா்ச்சனை நடைபெற்றது.

திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் கால பைரவா் சன்னதி முன்பு ஹோமம் நடத்தப்பட்டு, பூா்ணாஹூதி செய்யப்பட்டது. தொடா்ந்து சுவாமிக்கு கலசாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com