காரைக்கால்: காரைக்கால் நவோதயா வித்யாலயா பள்ளி மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வா் (பொறுப்பு) ஆா். கமலம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளையத்தில் இயங்கிவரும் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளியில், வரும் கல்வியாண்டு 6-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத்தோ்வு 11.8.2021 அன்று காரைக்காலில் 4 மையங்களில் நடைபெறவுள்ளது.
இவற்றில் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி மையம், காரைக்கால் அம்மையாா் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.