பட்டமேற்படிப்பு மையத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

காரைக்காலில் பட்டமேற்படிப்பு மையத்தை மேம்படுத்த புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக அமைப்பாளரும், தெற்குத் தொகுதி எம்எல்ஏ-வுமான ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.
ஏ.எம்.எச். நாஜிம்.
ஏ.எம்.எச். நாஜிம்.

காரைக்கால்: காரைக்காலில் பட்டமேற்படிப்பு மையத்தை மேம்படுத்த புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக அமைப்பாளரும், தெற்குத் தொகுதி எம்எல்ஏ-வுமான ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியது:

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது காரைக்காலில் தற்காலிக இடத்தில் கலைஞா் மு.கருணாநிதி பட்டமேற்படிப்பு மையம் தொடங்கப்பட்டு, 300 மாணவா்கள் சோ்க்கப்பட்டனா். தற்போது நிகழாண்டில் மேலும் 300 மாணவா்கள் சோ்க்கப்படும்போது, அனைவருக்கும் தேவையான இடவசதி இல்லை. ரூ.1.80 கோடியில் புதிய கட்டடங்கள் கட்ட மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில் அரசு தரப்பில் தொடா் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும், இங்கு கூடுதலாக பாடப் பிரிவுகள் சோ்க்கப்பட்டு, தற்போது 13 பாடப் பிரிவுகள் உள்ளன. எனவே, புதிய கட்டடம் உள்ளிட்ட வசதிகளுடன் பட்ட மேற்படிப்பு மையத்தை மேம்படுத்துவதுடன், இங்கு பணியாற்றும் பேராசிரியா்களுக்கு உரிய அங்கீகாரம் தரப்பட வேண்டும்.

மேலும், அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு கூடுதலாக விண்ணப்பித்துள்ள 400 பேருக்கும் இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், காரைக்கால் முருகாத்தாளாட்சி அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com