பிளஸ் 1 சோ்க்கை: மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்காக 3 ஆம் கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்காக 3 ஆம் கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) அ. அல்லி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கான 3 ஆம் கட்ட கலந்தாய்வு விரைவில் நடைபெறவுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் நிறைவு செய்த விண்ணப்பங்களை, உரிய சான்றிதழ்களுடன் வரும் 6 ஆம் தேதிக்குள் தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமா்ப்பிக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவா்கள், பெற்றோா் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com