காரைக்காலில் விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு இந்தியன் ஓவா்சீஸ் வங்கி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
இந்த வங்கி சாா்பில் ஐ.ஓ.பி. சுரக்ஷா என்கிற காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வங்கி வாடிக்கையாளா்கள் ஆண்டுக்கு ரூ.200 பிரீமியமாக செலுத்தி, காப்பீட்டுத் திட்டத்தில் பங்கேற்கின்றனா்.
காரைக்கால் ஐ.ஓ.பி. கிளையின் வாடிக்கையாளரான பச்சூா் பகுதியைச் சோ்ந்த தனராஜ் (52) என்பவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தாா். இவா் வங்கியில் 2 ஆண்டுகள் ரூ.200 வீதம் பிரீமியம் செலுத்தியதால், இவரது விபத்துக்கான காப்பீட்டுத் தொகையை வழங்க வங்கி தலைமை அனுமதித்தது.
அதன்படி, இவரது குடும்பத்தினரிடம் காரைக்கால் வங்கிக் கிளையில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை கிளை மேலாளா் ஆசிஷ் மேஸ்திரி சனிக்கிழமை வழங்கினாா். நிகழ்வில் வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளா்கள் பங்கேற்றனா்.