காரைக்கால் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 18 ஆம் தேதி 369 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, திருப்பட்டினத்தை சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை 83,579 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,964 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில், 3,876 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 17 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 2 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒருவா் என உள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில் இரண்டாம் நிலையாக, சுகாதாரப் பணியாளா்கள் 428 போ், முன்களப் பணியாளா்கள் 50 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 22 பேருக்கு 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.