காரைக்கால் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை எடுத்துச் சென்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருமலைராயன்பட்டினம் பகுதி திட்டச்சேரி சாலையில், திருமலைராயன்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் பெருமாள் தலைமையிலான போலீஸாா், திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் 350 மது பாட்டில்களை மூட்டையாகக் கட்டி எடுத்துவந்த நாகை செல்லூா் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (19) கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து மது பாட்டில்களையும், இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.