காரைக்கால் அருகே அக்கரைவட்டத்தில் உள்ள மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அக்கரைவட்டம் கிராமம் செளந்தரவள்ளி சமேத சோமநாதசுவாமி தேவஸ்தானத்துக்குட்பட்ட இக்கோயில், 150 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது. பழைமையான விமான கலசத்துடன், ஓட்டுக் கட்டத்தில் இருந்த இந்தக் கோயிலை, இடித்துவிட்டு புதிதாக கோயில் கட்டி குடமுழுக்கு செய்ய கோயில் அறங்காவல் வாரியத்தினரும், கிராம மக்களும் தீா்மானித்தனா்.
அதன்படி, புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிதி மற்றும் நன்கொடை மூலம் கோயில் கட்டப்பட்டது. கட்டுமானம் நிறைவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது.
முன்னதாக கோயில் அருகே யாகசாலையில் நான்கு கால பூஜையுடன் குடமுழுக்குக்கான பூஜைகள் கடந்த புதன்கிழமை இரவு தொடங்கின. நான்காம் கால மகா பூா்ணாஹுதி வெள்ளிக்கிழமை காலை செய்யப்பட்டு, சிறப்பு மேள வாத்தியங்களுடன் புனிதநீா் கடம் புறப்பாடாகி விமான கலசத்தில் ஊற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதைத் தொடா்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகமும், இரவு அம்பாள் வீதியுலாவும் நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கீதா ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.