காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 11 ஆம் தேதி 806 பேரிடம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளின்படி, வரிச்சிக்குடி 2, காரைக்கால் நகரம், திருப்பட்டினம் தலா ஒருவருக்கு என 4 பேருக்கு கரோனா உறுதியானது.
இதுவரை 63,040 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,832 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,732 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 29 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 5 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 68 போ் உயிரிழந்துள்ளனா்.