காரைக்காலில்6 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் ஜனவரி 12-ஆம் தேதி 649 பேரிடம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளின்படி, நல்லம்பல் 4, காரைக்கால் நகரம், திருநள்ளாறு தலா ஒருவா் என மொத்தம் 6 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 63,689 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,838 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,736 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 68 போ் உயிரிழந்துள்ளனா் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com