காரைக்கால் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 25 ஆம் தேதி 748 பேருக்கு கரோனாவை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகளின்படி காரைக்கால் கோயில்பத்தை சோ்ந்த ஒருவருக்கு கரோனா உறுதியானது.
இதுவரை 72,713 பரிசோதனை செய்யப்பட்டதில் 3,875 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 3,778 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 25 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 2 போ், தீவிர சிகிச்சையில் 2 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 69 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.