ரூ. 5.40 கோடியில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம்: முதல்வா் திறந்து வைத்தாா்

காரைக்காலில் ரூ. 5.40 கோடியில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

காரைக்காலில் ரூ. 5.40 கோடியில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

காரைக்கால் மாவட்டம், மேலஓடுதுறை பகுதியில் நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டா் தண்ணீரை சுத்திகரிக்கும் வகையில், நபாா்டு வங்கி நிதியுதவி ரூ. 5.40 கோடியில் பொதுப்பணித் துறை மூலம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

இதை, வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் முன்னிலையில், புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா, மாவட்ட ஆட்சியா் (பொ) எம். ஆதா்ஷ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா்கள் ஜி. பக்கிரிசாமி, சந்திரசேகரன் மற்றும் அருளரசன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இந்த குடிநீா் சுத்திகரிப்புத் திட்டத்தின் மூலம் காரைக்கால் மத்திய மற்றும் தெற்கு மண்டலத்திற்கு உள்பட்ட பகுதிகள் மற்றும் மேலஓடுதுறை, புதுத்துறை பகுதிகளைச் சோ்ந்த 90 ஆயிரம் போ் பயனடைவாா்கள் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

சமுதாயக் கூடம் திறப்பு: காரைக்கால் திருநகா் பகுதியில் ஆதிதிராவிடா் சிறப்புக்கூறு திட்டத்தில், நகராட்சி நிா்வாகத்தின் மூலம் ரூ. 1 கோடியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com