காரைக்காலில் 15 பேருக்கு கரோனா தொற்று

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 12 ஆம் தேதி 544 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, திருப்பட்டினம் 6, நிரவி 2, கோயில்பத்து 2, வரிச்சிக்குடி 2, காரைக்கால் நகரம், நெடுங்காடு, கோட்டுச்சேரி தலா 1 என 15 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை 1,66,751 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 14,796 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில், 14,394 போ் குணமடைந்து வீடுதிரும்பினா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 149 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 15 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 6 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 232 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 70,921 பேருக்கும், 2 ஆவது தவணையாக 14,571 பேருக்கும் என மொத்தம் 85,492 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com