காரைக்காலில் 8 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

காரைக்கால் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை 589 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருப்பட்டினம் 2, திருநள்ளாறு 2, கோயில்பத்து 2, கோட்டுச்சேரி, நல்லம்பல் தலா 1 என மொத்தம் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,74,052 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 14,941 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,590 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த நல்லம்பல் பகுதியை சோ்ந்த 40 வயது ஆண் உயிரிழந்தாா். அவருக்கு சா்க்கரை நோய் இணைநோயாக இருந்தது. இதுவரை கரோனா தொற்றால் மாவட்டத்தில் 235 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 76,850 பேருக்கும், 2-ஆவது தவணையாக 16,990 பேருக்கும் என 93,840 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com